ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

தமிழ் சினிமாவில் இன்றைய இயக்குனர்களில் முக்கியமான ஒருவர் செல்வராகவன். 2003ம் ஆண்டு வெளிவந்த 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதற்கு முன்பாக அவருடைய அப்பா கஸ்தூரிராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தார். தனுஷ் நாயகனாக அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதினார்.
தம்பி தனுஷை தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக மாற்றியதில் அண்ணன் செல்வராகவனுக்குத்தான் முக்கிய பங்குண்டு. அடுத்தடுத்து விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட சில படங்களைக் கொடுத்தவர் செல்வராகவன்.
தற்போது 'சாணி காயிதம்' படத்தின் மூலம் நடிகராகவும் மாறியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்வது குறித்து செல்வராகவன் டுவீட் செய்திருக்கிறார்.
“23 வருடங்களாக திரைப்பட உருவாக்கத்தில்....இன்று முதல் ஒரு நடிகராகவும்...என் ரசிகர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன், அவர்கள்தான் என்னை உருவாக்கியவர்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'சாணி காயிதம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.




