'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், அனைவருக்குமே ஒரு வருடம் தான் லாக்டவுன். ஆனால் நான் பத்து வருடங்களாக படவாய்ப்புகள் இல்லாமல் லாக்டவுனில் இருக்கிறேன் என்று சொல்லி கண்கலங்கியிருந்தார் வடிவேலு. இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து தற்போது வடிவேலு இரண்டு புதிய படங்களில் கமிட்டாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, மெட்டிஒலி சீரியல் மூலம் புகழ் பெற்ற திருமுருகன் அதையடுத்து எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு போன்ற படங்களை இயக்கினார். அந்த இரண்டு படங்களிலுமே வடி வேலுவும் நடித்திருந்தார். இந்த நிலையில் அடுத்த படியாக சத்யஜோதி பிலிம்சுக்காக தான் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு-ஆர்.ஜே.பாலாஜி இருவரையும் இணைத்து இயக்கப்போ¡கிறாராம் திரு முருகன்.
அதையடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் வடிவேலு நடிக்கயிருப்பதாக இன்னொரு செய்தியும் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு கடைசியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் வடிவேலு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.