பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் ஷங்கர். கடைசியாக படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்திற்கு பின் படப்பிடிப்பு துவங்கவில்லை. மேலும் கமல் தற்போது அரசியலில் பிஸியாகி விட்டதால் இதன் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. இருப்பினும் 60 சதவீதம் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் மீதி படப்பிடிப்பை முடித்த பின்னர் தான் அடுத்தப்பட வேலையில் ஷங்கர் இறங்க உள்ளார். இதற்கிடையே ராம்சரண் நடிப்பில் தமிழ்-தெலுங்கில் ஒரு படத்தை இயக்கும் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கி விட்டார் ஷங்கர். இந்தப்படம் முழுமையாக முடிந்த பின்னர் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் ஒரு படத்தை ஷங்கர் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.