மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர்.ரகுமான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'.
இப்படத்தின் படப்பிடிப்பு கொரானோ தடைகளுக்குப் பிறகு ஐதராபாத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது படக்குழுவினர் ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றங்கரையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம்.
சிங்கம்பள்ளி மற்றும் பப்பிகொன்டலு கிராமங்களுக்கு இடையில் உள்ள கோதாவரி ஆற்றுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். அங்கு சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டிற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாராகி வரும் சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்' என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. பலரும் படமாக்க முயற்சித்து பின் கைவிட்டனர். தற்போது மணிரத்னம் முழு முயற்சியுடன் அதைப் படமாக்கி வருகிறார்.