டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
புச்சி பாபு இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் அறிமுக நடிகர்கள் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நடித்து தெலுங்கில் வெளியான படம் 'உப்பெனா'. படத்தில் நாயகன், நாயகி அளவிற்கு படத்தின் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படம் இது.
இப்படத்தைப் பற்றி விமர்சகர்களும், தெலுங்குத் திரையுலகத்தின் பல பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். அனைவரும் மறக்காமல் தமிழ் நடிகரான விஜய் சேதுபதியைப் பற்றியும் குறிப்பிடுவார்கள். ஆனால், நேற்று இப்படத்தைப் பற்றிப் பாராட்டி டுவீட் செய்த நடிகர் மகேஷ் பாபு, விஜய் சேதுபதி பற்றி எதுவுமே சொல்லவில்லை. வேண்டுமென்றே விஜய் சேதுபதியைப் பற்றி குறிப்பிடாமல் விட்டாரா அல்லது மறந்துவிட்டாரா என்று தெரியவில்லை. கமெண்ட்டுகளில் ரசிகர்கள் அது பற்றி கேட்டதற்கும் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
“உப்பெனா, ஒரு வார்த்தையில்..கிளாசிக். இயக்குனர் புச்சிபாபு, நீங்கள் காலத்தால் மறக்க முடியாத ஒரு படத்தைக் கொடுத்துவிட்டீர்கள், உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். உப்பெனா படத்தின் இதயம் தேவிஸ்ரீபிரசாத். சிறந்த இசைக்காக இந்தப் படம் நினைவு கூறப்படும். டிஎஸ்பி இதுவரையிலான உங்களின் சிறந்த படம் இது.
இரண்டு புதுமுகங்கள், மிகச் சிறந்த நடிப்பை வழங்குவது இதயத்தைத் தூண்டுகிறது. வைஷ்ணவ், கிரித்தி நீங்கள் இருவரும் ஸ்டார். கடைசியாக, இயக்குனர் சுகுமார், மைத்திரி நிறுவனம் ஆகியோருக்கு இப்படத்திற்குப் பின்னணியாக இருந்ததற்கு நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.
எல்லாரையும் பாராட்டியவர் விஜய் சேதுபதியை மறந்தது ஏனோ ?.