மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! | நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா? சுதா கொங்கரா | மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ் | மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்? | மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? | ரவி மோகனின் நிழலாக இருக்கும் கெனிஷா | 35 ஆண்டுகளுக்கு பிறகும் ஹிட்டான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' | பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்” | மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல் | தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' |

தமிழ் சினிமா காமெடியன்களில் தனது உடல்மொழி காமெடியால் பெருவாரியான ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு. ஆனபோதிலும், தேர்தல் பிரச்சாரம் மற்றும் டைரக்டர்களுடன் விவகாரம் என சில சலசலப்புகளால் கடந்த பல ஆண்டுகளாகவே படவாய்ப்பு இல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்த கிடக்கிறார் வடிவேலு. ஒருநாள்கூட ஓய்வில்லாமல் நடித்து வந்த வடிவேலுவிற்கு ஒரு படம்கூட இல்லாத நிலை ஏற்பட்டு விட்டதே என்று சக சினிமா கலைஞர்களெல்லாம் அவரது நிலையை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலு பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, ''உங்களுக்கெல்லாம் ஒரு வருடம் தான் லாக்டவுன். ஆனால் நான் பத்து வருடம் லாக்டவுனிலேயே இருக்கிறேன். இப்போதும் நடிக்க உடம்பில் தெம்பு உள்ளது, ஆனால் வாய்ப்பு தருவதில்லை என பேசியிருக்கிறார். அதோடு, கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலையும் கண்கலங்கி பாடினாராம்.




