சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

தமிழ் சினிமா காமெடியன்களில் தனது உடல்மொழி காமெடியால் பெருவாரியான ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு. ஆனபோதிலும், தேர்தல் பிரச்சாரம் மற்றும் டைரக்டர்களுடன் விவகாரம் என சில சலசலப்புகளால் கடந்த பல ஆண்டுகளாகவே படவாய்ப்பு இல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்த கிடக்கிறார் வடிவேலு. ஒருநாள்கூட ஓய்வில்லாமல் நடித்து வந்த வடிவேலுவிற்கு ஒரு படம்கூட இல்லாத நிலை ஏற்பட்டு விட்டதே என்று சக சினிமா கலைஞர்களெல்லாம் அவரது நிலையை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலு பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, ''உங்களுக்கெல்லாம் ஒரு வருடம் தான் லாக்டவுன். ஆனால் நான் பத்து வருடம் லாக்டவுனிலேயே இருக்கிறேன். இப்போதும் நடிக்க உடம்பில் தெம்பு உள்ளது, ஆனால் வாய்ப்பு தருவதில்லை என பேசியிருக்கிறார். அதோடு, கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலையும் கண்கலங்கி பாடினாராம்.