ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் | அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 9 ஆரம்பம்! | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது! | என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு | பிளாஷ்பேக்: 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன திரைப்படம் | 'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்! | இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை |
மோகன்லால், மீனா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படமான த்ரிஷ்யத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இதிலும் மோகன்லால், மீனா நடித்துள்ளனர். ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா காலத்தில் இந்தப் படம் தயாரானாதால் அப்போது ஓடிடி தளத்தில் வெளியிட ஒப்பந்தம் போடப்பட்டது. இப்போது சகஜநிலை திரும்பியும் படம் ஓடிடி தளத்தில் வெளிவருவதற்கு மலையாள தியேட்டர் உரிகமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் விஜயகுமார் கூறியிருப்பதாவது: நடிகர்களை பெரிய அந்தஸ்துக்கு உயர்த்தியது திரையரங்குகள்தான். எனவே மோகன்லாலுக்கு மட்டுமல்ல, எல்லா நட்சத்திரங்களுக்குமே திரையரங்குகளைக் காக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கிறது.
ஏனென்றால் அதிலிருந்து தான் இவர்கள் அனைத்தையும் பெற்றுள்ளனர். த்ரிஷ்யம் 2 முதலில் திரையரங்க வெளியீடாகத்தான் பதிவு செய்யப்பட்டது. திடீரென ஓடிடியில் வெளியிடுவது நியாயமானதல்ல. நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட நடிகருக்கும் எதிரி அல்ல. திரையரங்குகளின் நலனுக்காகவே பேசுகிறோம்.
பல்வேறு காரணங்களால் திரையரங்குள் இழப்பை சந்தித்து வருகிறது. அந்தத் துறையின் பணியாளர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் மோசமாக இருக்கிறது. இதை நட்சத்திரங்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். படம் நாளை அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.