இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மோகன்லால், மீனா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படமான த்ரிஷ்யத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இதிலும் மோகன்லால், மீனா நடித்துள்ளனர். ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா காலத்தில் இந்தப் படம் தயாரானாதால் அப்போது ஓடிடி தளத்தில் வெளியிட ஒப்பந்தம் போடப்பட்டது. இப்போது சகஜநிலை திரும்பியும் படம் ஓடிடி தளத்தில் வெளிவருவதற்கு மலையாள தியேட்டர் உரிகமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் விஜயகுமார் கூறியிருப்பதாவது: நடிகர்களை பெரிய அந்தஸ்துக்கு உயர்த்தியது திரையரங்குகள்தான். எனவே மோகன்லாலுக்கு மட்டுமல்ல, எல்லா நட்சத்திரங்களுக்குமே திரையரங்குகளைக் காக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கிறது.
ஏனென்றால் அதிலிருந்து தான் இவர்கள் அனைத்தையும் பெற்றுள்ளனர். த்ரிஷ்யம் 2 முதலில் திரையரங்க வெளியீடாகத்தான் பதிவு செய்யப்பட்டது. திடீரென ஓடிடியில் வெளியிடுவது நியாயமானதல்ல. நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட நடிகருக்கும் எதிரி அல்ல. திரையரங்குகளின் நலனுக்காகவே பேசுகிறோம்.
பல்வேறு காரணங்களால் திரையரங்குள் இழப்பை சந்தித்து வருகிறது. அந்தத் துறையின் பணியாளர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் மோசமாக இருக்கிறது. இதை நட்சத்திரங்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். படம் நாளை அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.