'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! |
2014ல் வெளிவந்த 'பண்ணையாரும் பத்மினியும்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். கடந்த ஆறு ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் வெளிவந்த படங்களில் சில பாடல்கள் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன. இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்காத காரணத்தால் அவரால் தமிழில் இன்னும் முன்னணிக்கு வர முடியவில்லை.
இந்நிலையில் இந்தியத் திரையுலகில் அடுத்த பிரம்மாண்ட படம் என எதிர்பார்க்கப்படும் 'ராதே ஷ்யாம்' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளுக்கு அவர் இசையமைக்கிறார். ஹிந்திக்கு வேறு ஒருவர் இசையமைக்க உள்ளார்.
இதற்கு முன்பு விஜய் தேவரகொன்டா நடித்த 'டியர் காம்ரேட்' தெலுங்குப் படத்திற்கு இசையமைத்த ஜஸ்டினுக்கு தெலுங்கில் இரண்டாவது படம்தான் 'ராதே ஷ்யாம்'. தெலுங்கில் சில முன்னணி இசையமைப்பாளர்கள் இருக்க, ஜஸ்டினுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது தெலுங்குத் திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.