ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
நானும் ரவுடிதான் படத்தை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதி- நயன்தாரா வைத்து 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன். இதில் நடிகை சமந்தாவும் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில், “முதல் முறையாக எனது தங்கம் நயன்தாரா ஒருவருடன் ஜோடி சேர்வதை பார்த்து நான் பொறாமைபடவில்லை” என பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதோடு சமந்தா பற்றி நீங்கள் அருமையானவர், இந்த பார்ட்டியில் உங்களையும் இணைத்தது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் கூறுவதை பார்த்தால் இதுநாள் வரை அவர் மற்ற ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததை கண்டு சற்று பொறாமையில் இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது.