துரந்தர் படம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் பிடிக்கும் : ஆதித்யா தர் | அரசன் படத்தில் இணைந்த விக்ராந்த் | ஒரு ஆணை நிம்மதியாக வாழ விடுங்கள் : ரவி மோகன் பதிவு வைரல் | ஜனநாயகனுக்கு எதிராக விநியோகஸ்தர்கள்: பணத்தை திரும்பி கேட்கிறார்களா? | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'துரந்தர் 2' டிரைலர் | போர்சூழல் எதிரொலி : செய்தி சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் வெளியிட தடை | தமிழில் நடிக்கும் குஷி ரவி | கடவுள் பெயரில் டைட்டில்கள் : கண்டிப்பு காட்டும் தணிக்கை குழு | பிளாஷ்பேக்': சினிமாவில் ஜெயிக்க முடியாத லட்சிய நடிகரின் மகன் | பிளாஷ்பேக் : ஹேமமாலினிக்கு செட்ட ஆகாத தமிழ் சினிமா |

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்து பின்னர் கதாநாயகியாகவும் வலம் வந்தவர் ஷாலினி. அந்த சமயத்தில் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் உருவாகி திருமணம் செய்து கொண்டனர். தற்போது அஜித்-ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு முழுமையாக சினிமாவை விட்டு விலகி இல்லத்தரசியாக இருந்து வரும் ஷாலினி தற்போது மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக செய்தி ஒன்று சோசியல் மீடியாவில் வலம் வருகிறது. ஏற்கனவே 2000ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்தவரான ஷாலினி, 21 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். இந்த செய்தியை இன்னும் சம்பந்தப்பட்ட படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.