'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
கல்கி எழுதிய நாவலான 'பொன்னியின் செல்வன்' படத்தை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெட்சுமி உள்ளிட்ட எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. பின்னர் சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினார்கள். அதன்பின் கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டமாக படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள். இதுவரையிலும் 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து அங்கேயே படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.
படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த பிறகுதான் படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி முடிவு செய்ய உள்ளார்களாம்.