பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
கல்கி எழுதிய நாவலான 'பொன்னியின் செல்வன்' படத்தை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெட்சுமி உள்ளிட்ட எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. பின்னர் சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினார்கள். அதன்பின் கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டமாக படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள். இதுவரையிலும் 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து அங்கேயே படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.
படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த பிறகுதான் படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி முடிவு செய்ய உள்ளார்களாம்.