அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. அதன்பின் நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் அவ்வளவாக வெளியாகவில்லை.
50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்பதால் பலரும் படங்களை வெளியிடத் தயங்கினார்கள். ஆனால், அதையும் மீறி விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளியானது. பாதி இருக்கைகள்தான் என்றாலும் மக்கள் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டியதால் படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
கடந்த மாத பொங்கல் வெளியீடுகளுக்குப் பிறகு நேற்று முதல் தமிழ் சினிமா மீண்டும் பழைய பரபரப்புடன் தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. நேற்று 'களத்தில் சந்திப்போம், ட்ரிப், சிதம்பரம் ரயில்வே கேட், ஆட்கள் தேவை' ஆகிய நான்கு படங்கள் வெளிவந்தன.
அடுத்த வாரம் பிப்ரவரி 12ம் தேதியன்று, “பாரிஸ் ஜெயராஜ், குட்டி ஸ்டோரி, கேர் ஆப் காதல், நானும் சிங்கிள்தான், ஏலே” ஆகிய ஐந்து படங்கள் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
அடுத்து பிப்ரவரி 19ம் தேதியன்று விஷால் நடித்துள்ள 'சக்ரா' படம் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். அன்றைய தினம் மேலும் சில படங்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பழையபடி வாராவாரம் நான்கைந்து படங்கள் வரத் தயாராகியுள்ளதால் தமிழ் சினிமா உலகில் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.