பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை நிறுவிய நிறுவனம் சூப்பர்குட் பிலிம்ஸ். அந்நிறுவனத்தின் 90வது படமாக உருவாகியுள்ளது களத்தில் சந்திப்போம். ஜீவா, அருள்நிதி இணைந்து நடித்திருக்கிறார்கள். என்.ராஜசேகர் இயக்கி இருக்கிறார்.
படம் இன்று வெளியாகி உள்ளது. இதுகுறித்து அருள்நிதி அளித்த பேட்டி வருமாறு: நான் நடிக்க ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகிறது. இதுவரை 11 படங்களில் தான் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திற்கும் தேவையான காலஅவகாசம் எடுத்துக் கொள்கிறேன். இந்த ஆண்டுக்குள் இத்தனை படங்கள் நடித்து விட வேண்டும் என்ற எந்த இலக்கும், கணக்கும் என்னிடம் இல்லை. நிறைய கதைகள் கேட்கிறேன். அதில் எனக்கு பிடித்த என்னால் செய்ய முடியும் என்று நினைக்கிற படங்களில் நடிக்கிறேன். நல்ல கதை அமைந்து தயாரிப்பாளர் இல்லாவிட்டால் நானே தயாரிக்கவும் செய்கிறேன்.
களத்தில் சந்திப்போம் படத்தை 90 படங்களை தயாரித்து ஆர்.பி.சவுத்திரி தயாரிக்கிறார். எனது நண்பன் ஜீவா நடிக்கிறார் என்ற உடன் கதைகூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டேன். பிறகுதான் கதை கேட்டேன். இயக்குநர் ராஜசேகர் வீட்டுக்கு வந்து கதை சொன்னார். வணிகரீதியான படமாக இருந்தாலும் எல்லா விஷயங்களும் கதைக்குள் கச்சிதமாக வைக்கப்பட்டிருந்தது. அதனால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. இப்படியான படத்தில் இப்போதுதான் முதன் முறையாக நடிக்கிறேன்.
பெரிய ஹீரோ ஒருவருடன் இணைந்து நடிப்பது இது முதல் முறை. அடுத்து டைரி, எருமசாணி விஜய் இயக்கத்தில் ஒரு படம், பின் பிஜி முத்தையா தயாரிப்பில் அரவிந்த் என்கிற புதுமுக இயக்குநரோடு ஒரு படத்தில் நடிக்கிறேன். சீனு ராமசாமியின் படம் பேச்சுவார்த்தை அளவில் மட்டுமே இருக்கிறது. என்றார்.