அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
சினிமா விநியோக துறையில் இருந்த ஏ.ஆர்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் படத்தை அறிமுக இருக்குனர் விஷால் வெங்கட் இயக்குகிறார். இவர் இயக்குனர் மதுமிதாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ரியா, ரித்விகா, அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, அபி ஹாசன், மணிகண்டன், கே.எஸ்.ரவிகுமார், பானுப்பிரியா, நாசர், அனுபமா குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரதன் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் விஷால் வெங்கட் கூறியதாவது: இந்த படம் வெவ்வேறு வாழ்க்கை சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்கு கதாபாத்திரங்களின் ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதையாக உருவாக்கபட்டு இருக்கிறது. இரண்டு நாட்களில் நடக்கும் இந்த கதை, மனித மனத்தின் உள்ளார்ந்த உணர்ச்சிகளை பற்றி பேசும் என்கிறார்.