'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

குட்டிப்புலி, கொம்பன், மருது போன்ற வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் முத்தையா. கடைசியாக அவரது இயக்கத்தில் வெளிவந்த காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் தோல்வியடைந்தது. அடுத்த படத்திற்காக தொடர்ந்து சில முன்னனி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். இப்போது தனது மகனை வைத்து முத்தையா 'சுள்ளான் சேது' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து நடிகர்கள் விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக்கை ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்க பேசி வந்தார் முத்தையா. ஆனால் இந்தபடம் தாமதம் ஆகும் என தெரிகிறது. இதனால் நடிகர் அருள்நிதியை வைத்து அதிரடியான கிராமத்து கதைகளம் கொண்ட புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.