சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
குட்டிப்புலி, கொம்பன், மருது போன்ற வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் முத்தையா. கடைசியாக அவரது இயக்கத்தில் வெளிவந்த காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் தோல்வியடைந்தது. அடுத்த படத்திற்காக தொடர்ந்து சில முன்னனி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். இப்போது தனது மகனை வைத்து முத்தையா 'சுள்ளான் சேது' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து நடிகர்கள் விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக்கை ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்க பேசி வந்தார் முத்தையா. ஆனால் இந்தபடம் தாமதம் ஆகும் என தெரிகிறது. இதனால் நடிகர் அருள்நிதியை வைத்து அதிரடியான கிராமத்து கதைகளம் கொண்ட புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.