இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. அந்த கால கட்டத்தில் சில புதிய திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின.
முதலில் வந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. அதனால், ஓடிடி தளங்களின் எதிர்காலம் கூட கேள்விக்குறியானது. இந்நிலையில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி ஓடிடி தளங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் நன்றாக இல்லையே என இழந்த பெருமையை மீட்க அந்தப் படம் பெரிதும் உதவியது.
'சூரரைப் போற்று' படம் வெளியான 24 மணி நேரத்தில் 5 கோடியே 50 லட்சம் பார்வைகளையும், இரண்டு வாரங்களில் 10 கோடி பார்வைகளையும் பெற்றதாக அப்போது செய்திகள் வெளிவந்தன.
அந்த சாதனையை 'மாஸ்டர்' படம் முறியடிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 'மாஸ்டர்' படம் ஓடிடியில் வெளியான 24 மணி நேரத்தில் 90 லட்சம் பார்வைகளை மட்டுமே பெற்றதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் அப்படம் வெளியான நாளிலிருந்து பலரும் படத்தைப் பார்த்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
'சூரரைப் போற்று' படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானதால் அப்படி ஒரு வரவேற்பைப் பெற்றது. ஆனால், 'மாஸ்டர்' படம் தியேட்டர்களில் இரண்டு வாரங்கள் ஓடிய நிலையில் ஓடிடி தளத்தில் வெளியானது. இருந்தாலும் விஜய் படம் என்பதால் இப்படம் அடுத்த வாரங்களில் மேலும் அதிகப் பார்வைகளைப் பெறும் என்கிறார்கள். இருந்தாலும் 'சூரரைப் போற்று' படத்தின் 10 கோடிக்கும் அதிகமான பார்வை சாதனையை முறியடிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.