ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கடந்த சில நாட்களாகவே திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் வெளியாக வேண்டிய படத்தை இத்தனை நாட்களாக தியேட்டர் வெளியீடு என காத்திருக்க வைத்துவிட்டு, தற்போது ஓடிடியில் வெளியிட வேண்டிய காரணம் என்ன என திரையுலகத்திலேயே கேள்வி எழுப்புகிறார்கள்.
படத்தை ஓடிடியில் வெளியிடுவதை தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் விரும்பவில்லை என்றே தெரிகிறது. தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில்தான் படத்தை உருவாக்கி இருக்கிறோம் என அவர்கள் தரப்பு வாதமாக உள்ளதாம்.
தனுஷ் ரசிகர்களின் எதிர்ப்பை அடுத்து படத்தை ஓடிடியில் வெளியிடும் தினத்தன்றே தியேட்டர்களிலும் வெளியிடலாமா என தயாரிப்பாளர் யோசிக்கிறாராம். ஆனால், அதற்கு தியேட்டர்காரர்கள் கண்டிப்பாக சம்மதம் சொல்ல மாட்டார்கள்.
ஏற்கெனவே, 'ஈஸ்வரன்' படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் தினத்தன்றே வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தினார்கள். அப்படியிருக்க இந்தியாவிலும் ஒரே நாளில் ஓடிடியில் வெளியிட கண்டப்பாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
தியேட்டர்கள் சங்கத் தரப்பிலும் தயாரிப்பாளரிடம் ஓடிடி வெளியீடு வேண்டாம் என முறையிட்டுள்ளதாகத் தெரிகிறது. அடுத்த சில நாட்களில் படம் எப்படி வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.