ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு பாலிவுட்டிலும் பிரபலமான நடிகராகிவிட்டார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அவர் தற்போது நடிக்கும் படங்கள் அனைத்தையும் பிரம்மாண்டமாகவே உருவாக்கச் சொல்கிறார். அனைத்துப் படங்களும் ஹிந்தியிலும் வெளியாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது.
தற்போது 'ராதே ஷ்யாம், சலார்' படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்க உள்ள 'ஆதி புருஷ்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகி உள்ளது. மும்பையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கம் ஒன்றில் அதற்கான படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது.
ராமாயணக் கதையாக உருவாகும் இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ், சீதையாக கிரித்தி சனோன், ராவணன் ஆக சைப் அலிகான் நடிக்கிறார்கள். பிரம்மாண்டப் படைப்பாக உருவாகும் இப்படம் ஒரே சமயத்தில் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. தமிழ், கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் டப்பிங் செய்ய உள்ளார்கள்.