மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
இந்தியத் திரையுலகமே வியக்க வைக்கும் அளவிற்கு திரும்பிப் பார்க்க வைத்த படம் 'பாகுபலி'. அப்படத்தின் இரண்டு பாக வசூலும் தென்னிந்திய சினிமா மீதான கடந்த கால ஒப்பீட்டை அப்படியே மாற்றியது.
'பாகுபலி' தந்த பாதையில் மற்ற தென்னிந்திய மொழி திரையுலகினரும் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். 'பாகுபலி' அளவிற்கு வசூல் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்ட தமிழ்ப் படமான '2.0' ரசிகர்களையும், தயாரிப்பாளரையும் ஏமாற்றியது.
இருந்தாலும் அடுத்து வந்த கன்னடப் படமான 'கேஜிஎப்', தெலுங்குப் படமான 'சாஹோ', தென்னிந்தியப் படங்களின் வசூல் சாதனையைப் பற்றி இந்தியா முழுவதும் பேச வைத்தது.
கடந்த வருடம் கொரானோ தொற்று காரணமாக பிரம்மாண்டப் படங்கள் வெளிவரவில்லை. அவை இந்த ஆண்டில் வெளிவர உள்ளது. கன்னடத் திரையுலகத்திலிருந்து 'கேஜிஎப் 2', தெலுங்குத் திரையுலகத்திலிருந்து 'ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் சில மாத இடைவெளியில் வெளியாக உள்ளன.
இப்படங்களின் வியாபாரம் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படங்களின் வட இந்திய உரிமை, வெளிநாட்டு உரிமை, தமிழ் உரிமை ஆகியவை விலை பேசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கிறார்கள்.
இந்த இரண்டு படங்களின் வசூல், தென்னிந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போகுமென டோலிவுட்டிலும், சாண்டல்வுட்டிலும் பேசிக் கொள்கிறார்கள்.