ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்? | கை கட்டியபடி பேசுவார், வெள்ளை உடைகளை விரும்பி அணிவார்: பணிவுக்கும் உபசரிப்புக்கும் புகழ் பெற்ற ஏவி.எம்.சரவணன் | பிரபலங்கள் பட்டியல் 2025: தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு இடமில்லை… | சாய் பல்லவியால் மறுவாழ்வு பெற்றேன் ; இசையமைப்பாளர் நெகிழ்ச்சி | திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி |

தற்போது பாலிவுட் சினிமா வரை கொடி நாட்டி இருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், காமெடியன் என கலவையான வேடங்களில் நடித்து வரும் அவர் சமீபகாலமாக சில சர்ச்சைகளிலும் அவ்வப்போது சிக்கிக் கொண்டு வருகிறார்.
அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் உருவாக இருந்த 800 படம் மற்றும் துக்ளக் தர்பார் படத்தில் சீமானை அட்டாக் செய்திருப்பது போன்ற டீசர் வெளியான போதும் பரபரப்பு வளையத்திற்குள் வந்தார். அதன்பிறகு தனது பிறந்த நாளின்போது பட்டாக்கத்தியைக் கொண்டு கேக் வெட்டினார். அந்த போட்டோவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படியான நிலையில், நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, மாஸ்டர் படம் மூலம் திரையரங்குகளுக்கு ரசிகர்களை மீண்டும் கொண்டு வந்ததற்காக விஜய் உள்பட மாஸ்டர் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அதையடுத்து அவரிடத்தில், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் உருவாக இருந்த 800 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, 800 படம் குறித்த பிரச்சினை முடிந்து விட்டது. அதனால் அதை மீண்டும் கிளற வேண்டாம் என்று அதுகுறித்து பதிலளிக்க மறுத்து விட்டார் விஜய் சேதுபதி.