உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
தற்போது பாலிவுட் சினிமா வரை கொடி நாட்டி இருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், காமெடியன் என கலவையான வேடங்களில் நடித்து வரும் அவர் சமீபகாலமாக சில சர்ச்சைகளிலும் அவ்வப்போது சிக்கிக் கொண்டு வருகிறார்.
அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் உருவாக இருந்த 800 படம் மற்றும் துக்ளக் தர்பார் படத்தில் சீமானை அட்டாக் செய்திருப்பது போன்ற டீசர் வெளியான போதும் பரபரப்பு வளையத்திற்குள் வந்தார். அதன்பிறகு தனது பிறந்த நாளின்போது பட்டாக்கத்தியைக் கொண்டு கேக் வெட்டினார். அந்த போட்டோவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படியான நிலையில், நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, மாஸ்டர் படம் மூலம் திரையரங்குகளுக்கு ரசிகர்களை மீண்டும் கொண்டு வந்ததற்காக விஜய் உள்பட மாஸ்டர் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அதையடுத்து அவரிடத்தில், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் உருவாக இருந்த 800 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, 800 படம் குறித்த பிரச்சினை முடிந்து விட்டது. அதனால் அதை மீண்டும் கிளற வேண்டாம் என்று அதுகுறித்து பதிலளிக்க மறுத்து விட்டார் விஜய் சேதுபதி.