‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ்குமார் மலையாளத்தில் பிரபலமான ஒரு தயாரிப்பாளர். சிறு வயதில் தன் அப்பா தயாரித்த சில படங்களில் கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்திலும், தனது அப்பாவின் தயாரிப்பிலும் 'வாஷி' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
அது பற்றி கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளதாவது, “நீங்கள் நினைப்பதைவிட என் மனதிற்கு நெருக்கமான ஒரு படம். ஒரு பெண் குழந்தையாக, அப்பாவின் தயாரிப்பில் நடிப்பது சுலபம் என நினைத்துவிடலாம், ஆனால் எதுவும் சுலபமாக வருவதில்லை.
எனது சிறு வயது நண்பர் விஷ்ணு ராகவ் இந்த முறை என்னுடன் எனது இயக்குனராகப் பணிபுரிகிறார். எனது அபிமான மற்றும் சிறந்த நடிகரான டொவினோ தாமஸ் உடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி,” என கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழில் 'அண்ணாத்த, சாணிக் காயிதம்' படத்திலும், தெலுங்கில் 'ரங் தே, சரக்கு வாரி பாட்டா, அய்னா இஷ்டம் நுவ்வு' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். 'குட் லக் சகி' தெலுங்குப் படத்திலும், 'மரைக்கார்' மலையாளப் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.