நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து இயக்கி உள்ள படம் 'கர்ணன்'. தனுஷ் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகையான ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, லால் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இதனிடையே, இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படம் பற்றி ஒரு அப்டேட்டைக் கொடுத்திருக்கிறார். “கர்ணன், பார்த்தேன், திகைத்துப் போனேன். உங்களைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன் தனுஷ். இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு மற்றும் சிறப்பான குழுவினர். கர்ணன், அனைத்தும் கொடுப்பான்” எனப் பாராட்டியுள்ளார்.
தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படம் வெளிவந்ததும், 'கர்ணன்' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.