Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாழ்க்கை குரூரமானது: ஹலீதா ஷமீம் உருக்கம்

25 ஜன, 2021 - 12:09 IST
எழுத்தின் அளவு:
Director-Halitha-shameem-condolence-to-actor-Sriram-dead

ஹலீதா ஷமீம் இயக்கிய சில்லு கருப்பட்டி படத்தில் முதிய வயது காதலராக நடித்து புகழ்பெற்றவா ஸ்ரீராம். தற்காப்பு கலைஞரான இவர் தனது வீட்டு மொட்டை மாடியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து இயக்குனர் ஹலீதா ஷமீம் தனது டுவிட்டரில் உருக்கமாக எழுதியிருப்பதாவது:

ஸ்ரீராம் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிக வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். அவர் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பிப்பதில் மிகவும் உற்சாகமாக இருந்தார். தயாரிப்பில் இருக்கும் சில பெரிய படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து அவர் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதை என்னுடன் பகிர்ந்தார்.

ஸ்ரீராம் சார், உங்கள் ஆர்வமும், வசீகரமும் என்றும் எங்கள் மனதில் இருக்கும். உயிர்ப்புடன் இருந்த மனிதர் நீங்கள். இப்போது இல்லை என்பதை நம்ப முடியவில்லை. நீங்கள் அவ்வளவு அன்போடு என் டைரக்டர் மேம் என்று என்னை அழைத்தது, உங்கள் காலை நேர ஓவியங்களை, நீங்கள் நடித்து வந்த பெரிய படங்களின் புகைப்படங்களை என்னுடன் பகிர்ந்தது என எதுவும் மறக்காது.

சில்லுக் கருப்பட்டி வெளியாகி ஒரு வருடம் ஆனதைக் கொண்டாட நம் குழுவை இரவு விருந்துக்கு அழைத்ததற்கு நன்றி. நான் அதற்கான செலவைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று சொன்னபோது, இது என் விருந்து, அடுத்தமுறை நீங்கள் கொடுங்கள் என்று சொன்னீர்கள். ஆனால், அடுத்த முறை என்பது கிடையாது என்பதை உணரும்போது நொறுங்கிப் போகிறேன்.

வாழ்க்கை மிகவும் குரூரமானது. நீங்கள் எங்கிருந்தாலும், கண்டிப்பாக அங்கிருந்து, உங்கள் இணையற்ற உற்சாகத்துடன் எங்களைப் பார்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் வாழ்க்கையை நேசித்தவர். நான் என்றுமே உங்களை மனதில் வைத்திருப்பேன். நீங்கள் வாழ்க்கையை எப்படி நேசித்தீர்களோ அப்படி நேசிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வேன். நீங்கள் இல்லாத குறையை உணர்வேன்".

இவ்வாறு ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'சலார்' வாய்பைக் கைப்பற்றிய ஸ்ருதிஹாசன்'சலார்' வாய்பைக் கைப்பற்றிய ... ஜேம்ஸ்பாண்ட் படம் மீண்டும் தள்ளி வைப்பு ஜேம்ஸ்பாண்ட் படம் மீண்டும் தள்ளி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Saravanan AE - Navi Mumbai,இந்தியா
26 ஜன, 2021 - 14:21 Report Abuse
Saravanan AE வருத்தம் தரும் செய்தி. பாதுகாப்பு விஷயத்தில் நாம் எப்படி தவறி விடுகிறோம் ஓம் ஷாந்தி எத்தனை சிறுவர்கள் நீரில் மூழ்குவது நடக்கிறது. ஆனால் அரசு அல்லது அதிகாரிகள் அதனை தடுப்பதற்கு என்ன செய்தார்கள்? ஒரு எச்சரிக்கை பலகை அல்லது பஞ்சாயத்து தலைவர்களுக்கு வழிகாட்டு ஏடு எதுவும் கொடுத்தார்களா? மக்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தினார்களா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in