நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ் சினிமாவில் எப்போதுமே இரண்டிரண்டு நடிகர்களாக போட்டி போடுவதுதான் வழக்கம். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என்ற வரிசையில் தனுஷ் - சிம்பு என வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
தனுஷ் தன்னுடைய பாதையை தெளிவாகப் போட்டுக் கொண்டு ஹாலிவுட் வரை முன்னேறிவிட்டார். ஆனால், சிம்புவின் பாதை தடுமாற்றத்துடன் தான் உள்ளது. பொங்கலுக்கு வெளிவந்த 'ஈஸ்வரன்' படம் கூட வசூலுக்கு தடுமாறிக் கொண்டிருப்பதாகத் தகவல்.
அப்படத்தில் தனுஷை உசுப்பேற்றும் வகையில், “ 'நீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா, நான் காக்கறதுக்காக வந்திருக்கேன்....ஈஸ்வரன்டா' என சிம்பு வசனம் பேசியிருப்பார்.
தனுஷ் நடித்து 2019ல் வெளிவந்த 'அசுரன்' படம் தனுஷுக்கு நல்லதொரு பெயரைப் பெற்றுத் தந்தது. அவருடைய நடிப்பைப் பலரும் பாராட்டினார்கள். அப்படத்தைக் குறிப்பிட்டுத்தான் 'ஈஸ்வரன்' படத்தில் சிம்பு வசனம் பேசியிருப்பார் என்பதை குழந்தையும் சொல்லிவிடும்.
இந்நிலையில் தனுஷ் நேற்று தன்னுடைய டுவிட்டர் புரொபைலில் 'அசுரன்/நடிகர்' என தன் பயோ-வை மாற்றியுள்ளார். 'ஈஸ்வரன்' படத்தில் சிம்பு பேசிய வசனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் அவர் இப்படி மாற்றியுள்ளதாக ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.