என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் நவம்பர் 10ம் தேதி தியேட்டர்களைத் திறந்தனர். ஆனால், வெளியான சிறிய பட்ஜெட் படங்களைப் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளிவந்தால் தான் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அதன்படியே நடந்தும் விட்டது. உலக அளவில் 'மாஸ்டர்' படம் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.
இதனிடையே, 'மாஸ்டர்' படம் கொடுத்த தைரியத்தால் அடுத்தடுத்து சில படங்களை தியேட்டர்களில் வெளியிடத் தயாராக இருக்கிறார்கள். அடுத்த வாரம் “களத்தில் சந்திப்போம், கபடதாரி” ஆகிய சிறிய படங்கள் வெளியாக உள்ளன. அவற்றிற்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை.
பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிற தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படம் மீது தான் திரையுலகினரின் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், அனைத்து வேலைகளும் முடிவடைந்து தயாராக உள்ள வேறு சில படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் சில ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களைப் பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் சில தயாரிப்பாளர்களை அணுகி பேரம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.