இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். உடல் நலம் தேறி மும்பையில் உள்ள தன் வீட்டிற்குத் திரும்பினார்.
தமன்னா, தன்னுடைய உடலழகை மிகவும் கட்டுக்கோப்பாகக் காப்பாற்றி வந்தார். கொரோனா காரணமாக கொஞ்சம் இளைத்துப் போய்விட்டார். தற்போது தொடர் உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
“நீங்கள் தீவிரமாக இருக்க வேண்டியதில்லை, சீராக இருந்தாலே போதும், இரண்டு மாதங்கள் சீராக இருந்ததால், கோவிட்டுக்கு முந்தைய என்னுடைய உடலைப் பெற்றுவிட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழில் தமன்னா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் 'சீட்டிமார், எப் 3' மற்றும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.