2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். உடல் நலம் தேறி மும்பையில் உள்ள தன் வீட்டிற்குத் திரும்பினார்.
தமன்னா, தன்னுடைய உடலழகை மிகவும் கட்டுக்கோப்பாகக் காப்பாற்றி வந்தார். கொரோனா காரணமாக கொஞ்சம் இளைத்துப் போய்விட்டார். தற்போது தொடர் உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
“நீங்கள் தீவிரமாக இருக்க வேண்டியதில்லை, சீராக இருந்தாலே போதும், இரண்டு மாதங்கள் சீராக இருந்ததால், கோவிட்டுக்கு முந்தைய என்னுடைய உடலைப் பெற்றுவிட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழில் தமன்னா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் 'சீட்டிமார், எப் 3' மற்றும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.