நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். உடல் நலம் தேறி மும்பையில் உள்ள தன் வீட்டிற்குத் திரும்பினார்.
தமன்னா, தன்னுடைய உடலழகை மிகவும் கட்டுக்கோப்பாகக் காப்பாற்றி வந்தார். கொரோனா காரணமாக கொஞ்சம் இளைத்துப் போய்விட்டார். தற்போது தொடர் உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
“நீங்கள் தீவிரமாக இருக்க வேண்டியதில்லை, சீராக இருந்தாலே போதும், இரண்டு மாதங்கள் சீராக இருந்ததால், கோவிட்டுக்கு முந்தைய என்னுடைய உடலைப் பெற்றுவிட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழில் தமன்னா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் 'சீட்டிமார், எப் 3' மற்றும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.