சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு |
பாலிவுட்டை போன்று கன்னட சினிமாவிலும் போதை பொருள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் மற்றும் கர்நாடக காவல்துறையினர் கன்னட நடிகர், நடிகைகள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 19 பேர் மீது கர்நாடக காவல் துறையினர் போதைப் பொருள்கள் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனா்.
அதைத் தொடர்ந்து நடிகைகள் இருவரையும் கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராகினி சஞ்சனா ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சஞ்சனாவுக்கு மட்டும் அவர் உடல்நலக்குறைவை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டது.
ராகினி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ராகினியின் மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. அரசு தரப்பு மற்றும், நடிகை தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் "இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. மனுதாரர் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தியது உறுதியானால் கூட அவருக்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரையே தண்டனை விதிக்கப்படும்" என்று கூறி, ராகினிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். 140 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் ராகினி இன்று அல்லது நாளை விடுதலை செய்யப்படுவார் என்று தெரிகிறது.