'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா |
பி ஸ்டுடியோ என்ற நிறுவனத்திற்காக இயக்குனர் பாலாவும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் இருவரும் விசித்திரன் என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து வருகின்றனர். இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார். ஆனால் சிஎஸ்கே பிலிம்ஸ் சதீஷ்குமார், கடந்த 2015ம் ஆண்டே விசித்திரன் என்ற டைட்டீலை தான் கில்டு அமைப்பில் பதிவு செய்து கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனால் விசித்திரன் என்ற தலைப்பில் பி ஸ்டுடியோ தயாரிக்கும் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை 14ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குனர் பாலா, நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, வழக்கை வருகிற 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.