காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் சுரேஷ்கோபி, அதன்பிறகு சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கி அரசியலில் அடியெடுத்து வைத்தார்.. இந்தநிலையில் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ள சுரேஷ்கோபி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துல்கர் சல்மானுடன் இணைந்து வரனே ஆவசியமுண்டு என்கிற படத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது 249 ஆவது படமாக காவல் என்கிற படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் அவர் நடிக்கும் 250வது படமாக 'ஒத்தக்கொம்பன்' என்கிற படம் உருவாக இருக்கிறது.
பிரமாண்டமான படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் மேத்யூ தாமஸ் என்பவர் தான் இயக்கவுள்ளார். மலையாளத்தில் மோகன்லாலின் புலி முருகன், திலீப்பின் ராம்லீலா உள்ளிட்ட நூறு கோடி வசூலித்த பிரமாண்ட படங்களை தயாரித்த தோமிச்சன் முளக்குப்பாடம் என்பவர் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார். இந்தநிலையில் சமீபத்தில் சுரேஷ்கோபியை சந்தித்த தயாரிப்பாளர் தோமிச்சன் விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் இயக்குனரும் தானும் சேர்ந்து சுரேஷ்கோபியை சந்தித்த புகைப்படத்தையும் வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.