ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து விட்டது. இறுதிப்போட்டிக்கு சோம், ஆரி, பாலாஜி, ரியோ, கேப்ரில்லா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் குறிப்பிட்ட தொகையை கொடுத்து போட்டியில் இருந்து வெளியேற விரும்பும் போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை வந்த நடிகர் கவின், பிக்பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து, திடீரென வெளியேறினார். இந்த சீசன் நிறைவு பெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இப்போதும் அதேபோல் ஒரு குறிப்பிட்ட தொகையை பிக்பாஸ் வழங்கியுள்ளார். இந்த முறை பிக்பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு போட்டியிலிருந்து பாதியிலேயே கேப்ரில்லா வெளியேறி விட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கேப்ரில்லாவின் ஸ்மார்ட் மூவ் என இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவிலும் வைரலாக பரவி வருகிறது.
மீதமிருப்பவர்களில் சோம், ஆரி, பாலா ஆகிய மூவரும் போட்டியின் இறுதிநாள் வரை நிச்சயம் இடம் பிடிப்பார்கள் என உறுதியாகிவிட்ட நிலையில் நாலாவது நபராக ரியோ இடம்பெறுவார் என தெரிகிறது. ஐந்தாவது இடத்தில் இருக்கும் ரம்யா பாண்டியன் போட்டியின் இறுதி நாளுக்கு முன்னதாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என தெரிகிறது.