கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து விட்டது. இறுதிப்போட்டிக்கு சோம், ஆரி, பாலாஜி, ரியோ, கேப்ரில்லா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் குறிப்பிட்ட தொகையை கொடுத்து போட்டியில் இருந்து வெளியேற விரும்பும் போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை வந்த நடிகர் கவின், பிக்பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து, திடீரென வெளியேறினார். இந்த சீசன் நிறைவு பெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இப்போதும் அதேபோல் ஒரு குறிப்பிட்ட தொகையை பிக்பாஸ் வழங்கியுள்ளார். இந்த முறை பிக்பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு போட்டியிலிருந்து பாதியிலேயே கேப்ரில்லா வெளியேறி விட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கேப்ரில்லாவின் ஸ்மார்ட் மூவ் என இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவிலும் வைரலாக பரவி வருகிறது.
மீதமிருப்பவர்களில் சோம், ஆரி, பாலா ஆகிய மூவரும் போட்டியின் இறுதிநாள் வரை நிச்சயம் இடம் பிடிப்பார்கள் என உறுதியாகிவிட்ட நிலையில் நாலாவது நபராக ரியோ இடம்பெறுவார் என தெரிகிறது. ஐந்தாவது இடத்தில் இருக்கும் ரம்யா பாண்டியன் போட்டியின் இறுதி நாளுக்கு முன்னதாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என தெரிகிறது.