'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
பிரபல நடிகை கேப்ரில்லா சார்ல்டன். குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையிலும், சினிமாவிலும் அறிமுகமானார். பிக்பாஸ் என்ட்ரிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீசன் 2வில் ஹீரோயினாக நடித்தார். தற்போது சீரியல்களில் ஹீரோயினாக நடிக்க கேப்ரில்லாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அண்மையில் கேப்ரில்லா அளித்துள்ள பேட்டியில் சிறு வயதில் நடிக்க வந்த புதிதில் தனக்கு நிகழ்ந்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், 'நான் 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது என்னுடைய புகைப்படத்தை யாரோ தவறாக மார்பிங் செய்து வெளியிட்டார்கள். அந்த புகைப்படத்தில் இருப்பது நானே கிடையாது. ஆனால், புதிதாக பார்ப்பவர்கள் அது நான் தான் என்று நினைப்பார்கள். அந்த சமயத்தில் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். பள்ளியில் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். இதனால் மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. அந்த சம்பவத்திலிருந்து வெளியே வருவதற்கே எனக்கு சில நாட்கள் ஆனது' என்று கூறியுள்ளார்.