‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

சுந்தரி தொடரின் கதாநாயகியான கேப்ரில்லா செல்லஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். இவரை பலரும் ரோல்மாடலாக கொண்டுள்ளனர். பல கல்லூரி மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றனர். இந்நிலையில், இவர் அண்மையில் அவரது சோஷியல் மீடியாவில் வெளியிட்ட பதிவு ஒன்றில் 'அனைத்து வன்மங்களையும் அனைத்து பேச்சுகளையும் தாங்கும் பக்குவம் நமது வாழ்க்கையின் அருமை தெரியும்போதே புரியும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்க்கும் பலரும் கேப்ரில்லா இவ்வளவு அழுத்தமான கோபமான மெசேஜை யாருக்காக பதிவிட்டிருக்கிறார்? என கேள்வி கேட்டு வருகின்றனர். நடிக்க ஆரம்பித்த ஆரம்பகாலக்கட்டத்தில் கருப்பு நிறம், சுமாரான மூஞ்சி என பல காரணங்களுக்காக கேப்ரில்லா விமர்சிக்கப்பட்டார். ஆனால், அந்த தடையெல்லாம் உடைத்து தான் இன்று மக்களின் பிரபலமான நடிகை பட்டியலில் கேப்ரில்லா இடம்பிடித்துள்ளார். இதை குறிப்பிட்டு தான் கேப்ரில்லா இந்த பதிவை போட்டிருப்பார் என ரசிகர்கள் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர்.