தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் |
நடிகைகள் மற்றும் பிரபலமான பெண்கள் பலரும் சமீபகாலங்களில் தங்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியான கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரை நடிகை அஞ்சலி பாஸ்கரும் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து ஓப்பனாக பேசியிருக்கிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'நான் கஷ்டபட்ட குடும்பத்தில் இருந்து வந்ததால் பேருந்தில் பயணம் செய்வேன். பேருந்தில் சிலர் பெண்களை தவறாக பார்ப்பார்கள் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவார்கள். ஒருசமயம் ஒரு நடுத்தவர வயது நபர் என்னை தவறான வகையில் உரசினார். நான் உடனே அந்த நபருக்கு ஓங்கி ஒரு குத்துவிட்டு திட்டினேன். அதன்பின் அந்த நபர் இறங்கி சென்றுவிட்டார். ஆனால், அப்போது பேருந்தில் இருந்த ஒரு பெண் கூட எனக்காக ஆதரவு குரல் கொடுக்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருந்தது' என்று கூறியிருக்கிறார்.