ஒரு நடிகை உருவாகிறார்...!: மனம் தளராத மவுனிகா | சுயநலவாதி என பஹத் பாசிலை விமர்சித்த காமெடி நடிகருக்கு குவியும் கண்டனம் | தர்ஷனின் கைதி எண் பொறித்த டீசர்ட் ; நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நல ஆணையம் வலியுறுத்தல் | திலீப் படத்தின் கதாசிரியராக மாறிய ஒரு அடார் லவ் நாயகி | வேட்டையன் டப்பிங்கை துவங்கிய பஹத் பாசில் | அட்லி இயக்கத்தில் கமல் நடிப்பது உண்மையா? | போயஸ் கார்டன் வீடு எனது 20 வருட உழைப்பிற்கு கிடைத்த பரிசு! -தனுஷ் | இந்திரஜா- கார்த்திக் தம்பதிக்கு விருந்து கொடுத்த நடிகை சுஜா வாருணி! | பிரேம்ஜிக்கா இந்த நிலைமை? வைரலாகும் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட்! | ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார்! |
நடிகைகள் மற்றும் பிரபலமான பெண்கள் பலரும் சமீபகாலங்களில் தங்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியான கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரை நடிகை அஞ்சலி பாஸ்கரும் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து ஓப்பனாக பேசியிருக்கிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'நான் கஷ்டபட்ட குடும்பத்தில் இருந்து வந்ததால் பேருந்தில் பயணம் செய்வேன். பேருந்தில் சிலர் பெண்களை தவறாக பார்ப்பார்கள் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவார்கள். ஒருசமயம் ஒரு நடுத்தவர வயது நபர் என்னை தவறான வகையில் உரசினார். நான் உடனே அந்த நபருக்கு ஓங்கி ஒரு குத்துவிட்டு திட்டினேன். அதன்பின் அந்த நபர் இறங்கி சென்றுவிட்டார். ஆனால், அப்போது பேருந்தில் இருந்த ஒரு பெண் கூட எனக்காக ஆதரவு குரல் கொடுக்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருந்தது' என்று கூறியிருக்கிறார்.