ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
சுந்தரி தொடரின் கதாநாயகியான கேப்ரில்லா செல்லஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். இவரை பலரும் ரோல்மாடலாக கொண்டுள்ளனர். பல கல்லூரி மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றனர். இந்நிலையில், இவர் அண்மையில் அவரது சோஷியல் மீடியாவில் வெளியிட்ட பதிவு ஒன்றில் 'அனைத்து வன்மங்களையும் அனைத்து பேச்சுகளையும் தாங்கும் பக்குவம் நமது வாழ்க்கையின் அருமை தெரியும்போதே புரியும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்க்கும் பலரும் கேப்ரில்லா இவ்வளவு அழுத்தமான கோபமான மெசேஜை யாருக்காக பதிவிட்டிருக்கிறார்? என கேள்வி கேட்டு வருகின்றனர். நடிக்க ஆரம்பித்த ஆரம்பகாலக்கட்டத்தில் கருப்பு நிறம், சுமாரான மூஞ்சி என பல காரணங்களுக்காக கேப்ரில்லா விமர்சிக்கப்பட்டார். ஆனால், அந்த தடையெல்லாம் உடைத்து தான் இன்று மக்களின் பிரபலமான நடிகை பட்டியலில் கேப்ரில்லா இடம்பிடித்துள்ளார். இதை குறிப்பிட்டு தான் கேப்ரில்லா இந்த பதிவை போட்டிருப்பார் என ரசிகர்கள் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர்.