விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

நாதஸ்வரம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ருதி சண்முகப்பிரியா தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான ஒரு வருடத்திலேயே அரவிந்த் காலாமனார். இந்நிலையில், இவர்களது இரண்டாவது திருமணநாள் அண்மையில் வந்தது. அன்றைய தினத்தில் ஸ்ருதி தனது கணவர் புகைப்படத்தை அருகில் வைத்து கேக் வெட்டி கொண்டாடி 'உன்னை சந்திக்க காத்திருக்கிறேன்' என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 
ஸ்ருதியின் இந்த நிலைமையை பார்க்கும் பலரும் ஒருபுறம் அவர் தைரியமாக இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டாலும் மறுபுறம் அவர் அரவிந்தை நினைத்து வருந்துவது குறித்து கவலைப்பட்டு வருகின்றனர். சிலர், ‛அரவிந்த் இறந்துவிட்டார். ப்ளீஸ் அதிலிருந்து வெளிய வந்து வேற லைப் அமைச்சிக்கோங்க' எனவும் அட்வைஸ் செய்து வருகின்றனர். கணவரை இழந்த ஸ்ருதி தற்போது வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நகர்வாக தற்போது லெட்சுமி சீரியலில் கம்பேக் கொடுத்துள்ளார். அதுபோலவே அவர் மீண்டும் மறுமணம் செய்ய வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            