ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் | சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் | தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை | பிளாஷ்பேக்: இளையராஜா முடிவு செய்த கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக் : தமிழில் வெளியான முதல் கன்னடப் படம் | சசிகுமார் ஜோடியாக நடித்தது ஏன்? : சிம்ரன் விளக்கம் | காஷ்மீரில் அமைதியை கெடுப்பவர்களுக்கு கடும் தண்டனை : ரஜினி வேண்டுகோள் |
நாதஸ்வரம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ருதி சண்முகப்பிரியா தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான ஒரு வருடத்திலேயே அரவிந்த் காலாமனார். இந்நிலையில், இவர்களது இரண்டாவது திருமணநாள் அண்மையில் வந்தது. அன்றைய தினத்தில் ஸ்ருதி தனது கணவர் புகைப்படத்தை அருகில் வைத்து கேக் வெட்டி கொண்டாடி 'உன்னை சந்திக்க காத்திருக்கிறேன்' என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
ஸ்ருதியின் இந்த நிலைமையை பார்க்கும் பலரும் ஒருபுறம் அவர் தைரியமாக இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டாலும் மறுபுறம் அவர் அரவிந்தை நினைத்து வருந்துவது குறித்து கவலைப்பட்டு வருகின்றனர். சிலர், ‛அரவிந்த் இறந்துவிட்டார். ப்ளீஸ் அதிலிருந்து வெளிய வந்து வேற லைப் அமைச்சிக்கோங்க' எனவும் அட்வைஸ் செய்து வருகின்றனர். கணவரை இழந்த ஸ்ருதி தற்போது வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நகர்வாக தற்போது லெட்சுமி சீரியலில் கம்பேக் கொடுத்துள்ளார். அதுபோலவே அவர் மீண்டும் மறுமணம் செய்ய வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.