'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் | பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை-2 கைவிடப்பட்டதா? | திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா! | நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவரின் வீட்டில் குடியேறும் ஷாருக்கான்! | 'குட் பேட் அக்லி' படத்தின் மையக்கரு இதுதான்! - ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | சித்தார்த் - கியாரா திருமணத்தால் பல நாட்கள் அழுதேன் ; கிச்சா சுதீப் மகள் புது தகவல் | சல்மான்கான் குடும்பத்தினருடன் 'சிக்கந்தர்' படம் பார்த்த ஏ.ஆர் முருகதாஸ் | 'மிராஜ்' படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜீத்து ஜோசப் | மோகன்லால் அறிமுக காட்சியே ரஜினியை மனதில் வைத்து உருவாக்கியதுதான் ; பிரித்விராஜ் | 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரும் மனிஷா ஜஷ்னானி |
தமிழ் சின்னத்திரை நடிகைகள் லிஸ்ட்டில் டாப் இடத்தில் இருக்கிறார் ஆல்யா மானசா. சக நடிகரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவருக்கு தற்போது ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்து அண்மையில் பேட்டியளித்துள்ள ஆல்யா, 'அப்பா கேன்சர் நோயால் பாதிக்கபட்டிருந்தார். இதனால் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். காலையில் எழுந்து மேக்கப் போட்டு விட்டு ஆடிசனுக்கு செல்வேன். பலநேரம் அவர்களை என்னை அனுப்பிடுவார்கள். பொருளாதார நெருக்கடியினால் ஜிம் ட்ரெய்னராக வேலைபார்த்தேன். குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக்கொடுத்தேன். பாடலில் பின்னணியில் குரல் கொடுப்பது போன்ற கிடைக்கும் வேலைகளை செய்தேன். இப்படி சினிமாவில் முயற்சித்துக் கொண்டிருக்கும் போது தான் சின்னத்திரை வாய்ப்பு வந்தது. அப்பாவை காப்பாற்ற சினிமா வாய்ப்பு தேடுவதை விட்டுவிட்டு சீரியல் வாய்ப்பை எடுத்துக் கொண்டேன். ஆனால் இப்போது அதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். காரணம் சினிமாவில் நடித்திருந்தால் தீபாவளி, பொங்கல் என தான் மக்கள் என்னை பார்த்திருப்பார்கள். இப்போது தினம் தினம் பார்க்கிறார்கள். எனக்கு அது சந்தோஷமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.