அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தமிழ் சின்னத்திரை நடிகைகள் லிஸ்ட்டில் டாப் இடத்தில் இருக்கிறார் ஆல்யா மானசா. சக நடிகரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவருக்கு தற்போது ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்து அண்மையில் பேட்டியளித்துள்ள ஆல்யா, 'அப்பா கேன்சர் நோயால் பாதிக்கபட்டிருந்தார். இதனால் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். காலையில் எழுந்து மேக்கப் போட்டு விட்டு ஆடிசனுக்கு செல்வேன். பலநேரம் அவர்களை என்னை அனுப்பிடுவார்கள். பொருளாதார நெருக்கடியினால் ஜிம் ட்ரெய்னராக வேலைபார்த்தேன். குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக்கொடுத்தேன். பாடலில் பின்னணியில் குரல் கொடுப்பது போன்ற கிடைக்கும் வேலைகளை செய்தேன். இப்படி சினிமாவில் முயற்சித்துக் கொண்டிருக்கும் போது தான் சின்னத்திரை வாய்ப்பு வந்தது. அப்பாவை காப்பாற்ற சினிமா வாய்ப்பு தேடுவதை விட்டுவிட்டு சீரியல் வாய்ப்பை எடுத்துக் கொண்டேன். ஆனால் இப்போது அதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். காரணம் சினிமாவில் நடித்திருந்தால் தீபாவளி, பொங்கல் என தான் மக்கள் என்னை பார்த்திருப்பார்கள். இப்போது தினம் தினம் பார்க்கிறார்கள். எனக்கு அது சந்தோஷமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.