ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை கடந்த அக்டோபர் மாதமே திறந்து கொள்ளலாம் என மத்திய அரசு தளர்வு அறிவித்தது. ஆனால் கேரளாவிலோ கொரோனா அச்சம் காரணமாக தியேட்டர்களை திறக்க தடை விதித்திருந்தது அந்த மாநில அரசு. இந்தநிலையில் ஜன-5 முதல் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதித்து திரையரங்குகளை திறந்துகொள்ள கேரள அரசு விதிமுறைகளுடன் தளர்வுகளை அறிவித்தது. இந்தநிலையில் தற்போது எதிர்பாராத புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளதால் இன்னும் கேரளாவில் திரையரங்குகளை திறப்பதில் இழுபறி நீடிக்கிறது.
அதாவது கேரளா பிலிம் சேம்பர், அரசு விதித்துள்ள அதிகப்படியான வரிச்சுமையை விலக்குவதோடு மற்றும், ஊரடங்கு காலகட்டத்திற்கான மின் கட்டணத்தில் சலுகையும் அளிக்கவேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறது. அதேபோல இன்னொரு பக்கம் விநியோகஸ்தர்களோ திரையரங்கு உரிமையாளர்கள், தங்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை திருப்பி செட்டில் செய்தால் மட்டுமே புதுப்படங்களை ரிலீஸ் செய்வோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த எதிர்பாராத புதிய சிக்கலை தீர்த்து வைக்கும் முயற்சியில் தற்போது கேரள பிலிம் எக்ஸிபிடர்ஸ் சங்க தலைவராக இருக்கும் நடிகர் திலீப் இறங்கியிருக்கிறாராம்.