'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை கடந்த அக்டோபர் மாதமே திறந்து கொள்ளலாம் என மத்திய அரசு தளர்வு அறிவித்தது. ஆனால் கேரளாவிலோ கொரோனா அச்சம் காரணமாக தியேட்டர்களை திறக்க தடை விதித்திருந்தது அந்த மாநில அரசு. இந்தநிலையில் ஜன-5 முதல் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதித்து திரையரங்குகளை திறந்துகொள்ள கேரள அரசு விதிமுறைகளுடன் தளர்வுகளை அறிவித்தது. இந்தநிலையில் தற்போது எதிர்பாராத புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளதால் இன்னும் கேரளாவில் திரையரங்குகளை திறப்பதில் இழுபறி நீடிக்கிறது.
அதாவது கேரளா பிலிம் சேம்பர், அரசு விதித்துள்ள அதிகப்படியான வரிச்சுமையை விலக்குவதோடு மற்றும், ஊரடங்கு காலகட்டத்திற்கான மின் கட்டணத்தில் சலுகையும் அளிக்கவேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறது. அதேபோல இன்னொரு பக்கம் விநியோகஸ்தர்களோ திரையரங்கு உரிமையாளர்கள், தங்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை திருப்பி செட்டில் செய்தால் மட்டுமே புதுப்படங்களை ரிலீஸ் செய்வோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த எதிர்பாராத புதிய சிக்கலை தீர்த்து வைக்கும் முயற்சியில் தற்போது கேரள பிலிம் எக்ஸிபிடர்ஸ் சங்க தலைவராக இருக்கும் நடிகர் திலீப் இறங்கியிருக்கிறாராம்.