தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முன்னணி தெலுங்கு இயக்குனர்களில் ஒருவர் கிரிஷ். தமிழில் வானம் படத்தை இயக்கியவர், தெலுங்கில் வேதம், காஞ்சி, கப்பர்ஸ் பேக், காம்யம் உள்பட பல படங்களை இயக்கியவர். கடைசியாக கங்கனா ரணவத் நடித்த மணிகர்னிகாக படத்தை இயக்கி அதிலிருந்து பாதியில் வெளியேறினார். பின்னர் என்.டி.ராமராவின் வரலாற்றை இரண்டு பாகமாக இயக்கினார். தற்போது தலைப்பு வைக்கப்பட்டாத இரண்டு படங்களை இயக்கி வருகிறார். ஒன்றில் ரவிதேஜாவும், மற்றொன்றில் பவன் கல்யாணும் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் கிரிஷிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கிரிஷ் இயக்கும் பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக இருந்தது. இதனால் படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது. இதில் கிரிஷிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதனால் படப்பிடிப்பு மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.