நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
முன்னணி தெலுங்கு இயக்குனர்களில் ஒருவர் கிரிஷ். தமிழில் வானம் படத்தை இயக்கியவர், தெலுங்கில் வேதம், காஞ்சி, கப்பர்ஸ் பேக், காம்யம் உள்பட பல படங்களை இயக்கியவர். கடைசியாக கங்கனா ரணவத் நடித்த மணிகர்னிகாக படத்தை இயக்கி அதிலிருந்து பாதியில் வெளியேறினார். பின்னர் என்.டி.ராமராவின் வரலாற்றை இரண்டு பாகமாக இயக்கினார். தற்போது தலைப்பு வைக்கப்பட்டாத இரண்டு படங்களை இயக்கி வருகிறார். ஒன்றில் ரவிதேஜாவும், மற்றொன்றில் பவன் கல்யாணும் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் கிரிஷிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கிரிஷ் இயக்கும் பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக இருந்தது. இதனால் படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது. இதில் கிரிஷிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதனால் படப்பிடிப்பு மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.