‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் பரியேறும் பெருமாள். எழுத்தாளர் மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு, மாரிமுத்து நடித்திருந்தனர். இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருந்தார். ஜாதி கொடுமைகளை பற்றிய பேசிய படம். ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
நேற்று நடைபெற்ற குரூப்-1 தேர்வு வினாத்தாளில், பரியேறும் பெருமாள் குறித்த கேள்வி இடம்பெற்றிருந்தது. "தலைசிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்" என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது.
இதற்கு 3 பதில்கள் கொடுக்கப்பட்டு அதில் ஒன்றை தேர்வு செய்ய சொல்லி இருந்தார்கள். 1. இந்தப் படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக்காட்டியது. 2. இந்த படம் மிகச் சிறந்த படம் என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது. 3. இப்படம் திரு.மாரி செல்வராஜால் இயக்ககப்பட்டு நீலம் தயாரிப்பு குழுவால் வெளியிடப்பட்டது.
இவ்வாறு அந்த கேள்வி, பதில் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து மாரிசெல்வராஜ் தனது டுவிட்டரில் பரியேறும் பெருமாள் என்கின்ற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது. இனி அது மானுட சமூகத்தின் பிரதி; யாவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபக்கம் இருந்தாலும் அரசு நடத்தும் ஒரு தேர்வில் ஒரு படத்தை "தலைசிறந்த படைப்பு" என்று எந்த அடிப்படையில் குறிப்பிடப்பட்டது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.