மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கிய சீனுராமசாமி தற்போது இயக்கியுள்ள படம் நீர்ப்பறவை. மீனவர்களின் வாழ்வாதாரப்பிரச்னையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கும் அவர், ஒரு அழகான காதலையும் அதற்குள் வைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது, நிருபர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை சொல்லிய அவர், இந்த படத்தில் தம்பி ராமைய்யா ஒரு ஒழுங்கீனமான ஆசிரியராக இப்படத்தில் நடித்திருக்கிறார். அதாவது, பாரதியார் அக்ரஹாரத்துக்குள் கழுதையை தூக்கிக்கொண்டு நுழைந்தாரா அதே மாதிரி என்று பேசினார். இதன்காரணமாக கடுப்பான ஒரு நிருபர், அதெப்படி பாரதியாரை ஒழுங்கீனமானவர் என்று சொல்லலாம். அவர் செய்தது புரட்சி என்று கடுமையாக சாட, ஒருகணம் ஆடிப்போனார் சீனுராமசாமி. அதையடுத்து, தான் பேசியது தவறு என்று மீடியா முன்பு அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதோடு, பிரஸ்மீட் முடியும்போதும், நான் ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்று மீண்டும் கேட்டுக்கொண்டார் அவர்.