மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
"புது வசந்தம், சூர்யவம்சம், வானத்தைப் போல, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் போன்ற, வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமன் தற்போது, "நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்குகிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில், ரமேஷ், இமானுவேல் இருவரும் இணைந்து, இந்த படத்தை தயாரிக்கின்றனர். பால்ராஜ் இசையமைக்கிறார்; பா.விஜய், நா.முத்துக்குமார், கலைக்குமார், ஆகியோர், பாடல்களை எழுதுகின்றனர். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படம் பற்றி, விக்ரமனிடம் கேட்டபோது, "என்னுடைய, 17வது படம் இது. இதுவரை, காதல், குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை என, ஜனரஞ்சக கலவையாக படம் எடுத்தேன். இந்த முறை, காதலை மட்டுமே பிரதானமாக வைத்து, படத்தை இயக்குகிறேன். படத்தில் அத்தனை பேரும் புது முகங்களாக இருப்பதால், முன்னதாகவே நடிப்பு பயிற்சி கொடுக்க, முடிவு செய்துள்ளேன் என்கிறார், இயக்குனர்.