ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர்.சிக்கு விலை உயர்ந்த ஆடி கியூ 5 காரை பரிசாக அளித்துள்ளார். நடிகை குஷ்புவும், டைரக்டர் சுந்தர்சியும் காதலித்து திருமணம் செய்தவர்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்ட குஷ்பு, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் பங்கேற்று வருகிறார். டைரக்டர் சுந்தர்சி டைரக்ஷனுடன், ஹீரோவாகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது கணவருக்கு பிடித்த காரை குஷ்பு பரிசளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு எல்லாமே சுந்தர் சி.தான். என் காதல் வெளிப்பாடாகவே இந்த காரை வாங்கி பரிசாக அளித்துள்ளேன். சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இவ்வருடத்தின் பெரிய ஹிட் படமாக இது அமைந்தது. நான் இப்படத்தின் தயாரிப்பாளர் இதில் பணியாற்றியதற்காக சுந்தர்சிக்கு ஊதியம் அளிக்கவில்லை. அதற்கு பதில் ஆடி கார் அளித்துள்ளேன். சுந்தர்.சிக்கு கார்கள் மீது அதிக பிரியம். அவருக்கு ஏதாவது பரிசு பொருளை கொடுத்து ஆச்சரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது எனவேதான் கார் பரிசளித்தேன். சுந்தர்.சி இன்னும் வெற்றிகரமான படங்களை கொடுப்பதற்கு இந்த கார் பரிசு ஊக்கப்படுத்துவதாக இருக்கும், என்றார்.