அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? |
நடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர்.சிக்கு விலை உயர்ந்த ஆடி கியூ 5 காரை பரிசாக அளித்துள்ளார். நடிகை குஷ்புவும், டைரக்டர் சுந்தர்சியும் காதலித்து திருமணம் செய்தவர்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்ட குஷ்பு, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் பங்கேற்று வருகிறார். டைரக்டர் சுந்தர்சி டைரக்ஷனுடன், ஹீரோவாகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது கணவருக்கு பிடித்த காரை குஷ்பு பரிசளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு எல்லாமே சுந்தர் சி.தான். என் காதல் வெளிப்பாடாகவே இந்த காரை வாங்கி பரிசாக அளித்துள்ளேன். சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இவ்வருடத்தின் பெரிய ஹிட் படமாக இது அமைந்தது. நான் இப்படத்தின் தயாரிப்பாளர் இதில் பணியாற்றியதற்காக சுந்தர்சிக்கு ஊதியம் அளிக்கவில்லை. அதற்கு பதில் ஆடி கார் அளித்துள்ளேன். சுந்தர்.சிக்கு கார்கள் மீது அதிக பிரியம். அவருக்கு ஏதாவது பரிசு பொருளை கொடுத்து ஆச்சரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது எனவேதான் கார் பரிசளித்தேன். சுந்தர்.சி இன்னும் வெற்றிகரமான படங்களை கொடுப்பதற்கு இந்த கார் பரிசு ஊக்கப்படுத்துவதாக இருக்கும், என்றார்.