'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சேகர் கம்முலா. தற்போது தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'குபேரா' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் பான் இந்தியா படமாக ஜுன் 20ம் தேதி வெளியாக உள்ளது. சேகர் கம்முலா திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. அதை முன்னிட்டு சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்றார். “பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்த ஆளுமை சிரஞ்சீவி,” எனக் குறிப்பிட்டிருந்தார் சேகர்.
சேகர் கம்முலாவை வாழ்த்தி அவருக்கு பேனா ஒன்றை பரிசளித்த சிரஞ்சீவி அவர் குறித்து தற்போது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “என் அன்பான சேகர், உங்களைப் போன்ற ஒரு ரசிகர் எனக்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் பயணத்தை நான் ஊக்கப்படுத்தியதை அறிந்து நான் இன்னும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வழியில் உங்கள் 25 ஆண்டுகால பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். நுட்பமான பொழுதுபோக்குடன் சமூக விமர்சனமும் சேர்க்கப்பட்ட சிந்தனை மிக்க உங்கள் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
திரைப்படத் தயாரிப்பில் நீங்கள் ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கியுள்ளீர்கள், மேலும் நீங்கள் இன்னும் 25 ஆண்டுகள் 'எழுதுதல்', தயாரித்தல் மற்றும் பல பெரிய உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன். இந்த அற்புதமான மைல்கல்லுக்கு வாழ்த்துக்கள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் அடுத்த 25 ஆண்டுகள் மகிமையுடன் அமைய வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்,” என வாழ்த்தியுள்ளார்.