ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
வருடத்திற்கு மூன்று படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார். நடிகை மம்தாமோகன் தாஸ் கடந்த வருடம் பக்ரைன் தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனை மணந்தார். இவர் ஏற்கனவே தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க போன்ற படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாளத்தில் தற்போது நான்கு படங்கள் கைவசம் உள்ளன.
திருமணத்துக்கு பிறகு நடிக்க வந்திருப்பது பற்றி மம்தாமோகன்தாஸ் அளித்துள்ள பேட்டியில், திருமணத்துக்கு பின் சினிமாவில் நான் அதிக ஆர்வம் காட்டுவதாக பேசுகின்றனர். கல்யாணம் ஆன பின் நடிப்பது தவறல்ல. திருமணத்துக்கு பிறகு நடிக்கக் கூடாது என்று இல்லை. நான் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்தே நடிக்கிறேன். வருடத்துக்கு மூன்று படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். மலையாளத்தில் மம்முட்டியுடன் ஜவான் ஆப் வெற்றி மல படத்திலும் திலீப்புடன் மைபாஸ் படத்திலும் தற்போது நடித்து வருகிறேன், என்று கூறியுள்ளார்.