மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
என்னை நிறைய பேர் அரசியலுக்கு கூப்பிடுகிறார்கள்... ஆனால் எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை, என்று நடிகை நமீதா கூறியுள்ளார். ஈரோட்டில் நடந்த தனியார் ஹோட்டல் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை நமீதாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நமீதாவிடம் ஆட்டோகிராப் வாங்க ரசிகர்கள் முண்டியடித்தனர். நமீதாவும் அனைவருக்கும் பொறுமையாக கையெழுத்து போட்டு கொடுத்தார்.
அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு சிட்டி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. ஈரோடு மக்கள், ரசிகர்கள் எனக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தாங்க. இதை நான் மறக்க மாட்டேன். நான் சுமார் 50 படங்களில் நடிச்சிட்டேன். இப்போ 2 தெலுங்கு படம், 1 தமிழ்படம், 1 கன்னட படத்தில் நடிச்சிட்டு இருக்கேன். எனக்கு வாழ்வு கொடுத்த தமிழையும், தமிழக மக்களையும் மறக்க மாட்டேன். எல்லாரும் நீங்க அரசியலுக்கு வருவீங்களான்னு கேட்கிறாங்க. என்னை அரசியலுக்கு வரும்படி கூப்பிடுறாங்க. ஆனால் எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் கிடையாது. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாது, என்றார்.