மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படம் முடிவடைந்த நிலையில் வருடக்கணக்கில் முடங்கிக்கிடக்கிறது. இந்நிலையில் அமிதாப்பச்சனுடன் இணைந்து, 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான 'கள்வனின் காதலி' மற்றும் ஜீவன் நடித்த 'மச்சக்காரன்', அகில் நடித்த 'நந்தி' ஆகிய படங்களை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இப்படம் குறித்து அதன்பிறகு எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படம் குறித்து இப்போது ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது.
அதாவது தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்க இருக்கிறது. இயக்குனர் தமிழ்வாணன், எஸ்.ஜே.சூர்யா இருவரும் சமீபத்தில் அமிதாப்பச்சனை சந்தித்து பேசியுள்ளனர். அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ் படமான இப்படத்தை சுரேஷ் கண்ணனின் 'திருச்செந்தூர் முருகண் புரொடக்ஷன்ஸ்' நிறுவனமும், பைவ் எலிமென்ட்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
சிவாஜி நடிப்பில், ஏவி.எம்.நிறுவனம் தயாரித்த படம் தான் 'உயந்த மனிதன்'. எனவே அந்நிறுவனத்திடம் முறையாக அனுமதி பெற்று இப்படத்திற்கு அந்த டைட்டிலை சூட்டியுள்ளனர்.