விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அந்தப் படத்திற்குப் பிறகு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதற்கு ரஜினிகாந்த் கேட்கும் சம்பளம் தான் காரணம் என ஒரு தகவல் திரையுலகத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
ரஜினி கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. 500 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்த 2.0 படமே சரியான லாபத்தைக் கொடுக்கவில்லை. அப்படியிருக்க படத்தின் பட்ஜெட்டைக் கணக்குப் போட்டுப் பார்த்து தயாரிப்பாளர்கள் பின்வாங்குவதாகத் தகவல்.
கடந்த மூன்று படங்களாக ஒரு படம் வெளியாவதற்குள்ளேயே அடுத்த பட படப்பிடிப்பை ஆரம்பித்த ரஜினிகாந்த், 'பேட்ட' படத்திற்குப் பிறகு அடுத்த படத்தை அறிவிக்க முடியாமல் இருந்து வருகிறார். மேலும், 'பேட்ட' படத்தின் வியாபாரமும், '2.0' படத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகத்தான் நடந்து வருகிறதாம்.