பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் நடந்து வருகிறது. கதவுக்கு பூட்டு, பூட்டு உடைப்பு, விஷால் கைது, வழக்கு, என தயாரிப்பாளர் சங்கம் முன்பு எப்போதும் சந்தித்திராத பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் விஷால் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சரத்குமாரும், நடிகை ராதிகாவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நேற்று கிருஸ்துமஸ் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: என் மீது 150 கோடி வரை ஊழல் சொன்னார்கள். அதன்பிறகு கடைசியாக 3 லட்சத்தில் வந்து நின்றார்கள். இப்போது அதே குற்றச்சாட்டை அவர்கள் சந்திக்கிறார்கள். அதை அவர்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். எங்களுக்கு ஒரு நியாயம், அவர்களுக்கு ஒரு நியாயமா? விஷால் அனைவரிடமும் உட்கார்ந்து பேச வேண்டும் என்றார்
ராதிகா சரத்குமார் கூறியதாவது: விஷால் நிர்வாகத்தில் நிறைய தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலை கருத்தில் கொண்டு அறக்கட்டளை நிதியை எடுத்து சிறு தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியமாக கொடுத்திருக்கிறார். அவர் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் பணியாற்ற வேண்டும். தலைவர் பதவியில் இருந்து விலகி அவர் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.