ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
விஜய் நடித்த சர்கார் படம் கடந்த தீபாவளி அன்று வெளிவந்தது. இதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் அரசின் நலத் திட்டங்கள் பற்றி அவதூறான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்பதால் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் முருகதாசை கைது செய்ய இடைக்கால தடைவிதித்தது.