இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

விஜய் நடித்த சர்கார் படம் கடந்த தீபாவளி அன்று வெளிவந்தது. இதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் அரசின் நலத் திட்டங்கள் பற்றி அவதூறான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்பதால் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் முருகதாசை கைது செய்ய இடைக்கால தடைவிதித்தது.