மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகை தமன்னா நடிகர் சிரஞ்சீவியுடன், தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். சைரா நரசிம்ம ரெட்டி அந்த படத்தின் படபிடிப்புக்கு மத்தியில், தமன்னா அளித்த பேட்டி :
எனக்குப் பிடித்த, பிடிக்காத நடிகைகள் அவ்வளவு பேரின் படங்களையும் நான் ரசித்தே பார்ப்பேன். ஒவ்வொருவரிடம் இருந்தும், குறைந்தபட்சம் ஒரு நல்ல விஷயத்தையாவது பார்ப்பேன். அதை பின்பற்ற வேண்டும் என நினைப்பேன். அதற்காக, இந்த நடிகை போல நாம் வர வேண்டும் என, ஒரு நாளும் நினைத்ததில்லை.
நான் நானாகத்தான் எந்நாளும் இருக்க வேண்டும். அதே போலத்தான் மற்றவர்களும் இருக்க வேண்டும். ஒரு நாளும் தமன்னா மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. ஒவ்வொருவரும், தங்களுடைய தனித் திறமையை வெளிப்படுத்தி, தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். தொழிலில் முழு கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் பணியாற்றினால், வெற்றி நிச்சயம் தேடி வரும்.
என்னுடைய லட்சக்கணக்கான ரசிகர்கள், என்னுடைய ஒவ்வொரு படமும் நன்றாக ஓட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றனர். அவர்களுக்கு நான் கடமைபட்டுள்ளேன். நான், ஒரு நாளும் அழுது வடியும் கேரக்டரில் நடிக்க விரும்பியது கிடையாது. சந்தோஷமாக இருக்கும் கேரக்டர்தான் எனக்குப் பிடிக்கும்.
இவ்வாறு தமன்னா பேட்டியில் கூறியுள்ளார்.